பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருக்கிறார். தற்போது தான் நலமாக இருப்பதாகவும் சிறப்பான சிகிச்சை வழங்கிய தன்னை காத்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சௌரவ் கங்குலி கூறியிருக்கிறார்.
விரைவில் முழுமையாக குணமடைந்து அன்றாட அலுவல்களுக்கு திரும்புவேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று திடீர் மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சவுரவ் கங்குலி வீடு திரும்ப இருந்தாலும் தொடர்ந்து அவர்களின் உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்படும் என்றும் மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.